Thursday, July 5, 2018

Good story

இந்த உலகில் பெரிய பிரச்சனை எது தெரியுமா?

ஒவ்வொரு மனித
உயிரும்
இவ் உலகில் தானே சிறந்தவன்

என்னை விட அறிவாளி யாரும் இல்லை என நினைக்கும் சில & பல மனிதர்களே இந்த உலகின் மிக பெரிய பிரச்சனை

உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு

மனிதன் அனைத்து உயிரினங்களை விட
அனைத்து விதத்திலும்
உயர்ந்தவன் அல்ல

ஆமை மனிதனை விட அதிக காலம் வாழும்

மண்புழு தன் உடலின் எடையை விட 100 மடங்கு அதிக உணவை உண்ணும்

எறும்பு தன் எடையைவிட 50% அதிகம் உள்ள பொருளை தூக்கி செல்லும்

மீன் & தவளை மனிதனை விட.
மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்யும்
( லட்ச கணக்கில்)

மளிதன் எவ்வகையில்
உயர்வு

பரிமாண வளர்ச்சியால் ஏற்பட்ட
மனிதனின் மூளை (அறிவு )வளர்ச்சி

அந்த அறிவே
தன்னை
பெரிய அறிவாளி
திறமை சாலி
பொறுமை சாலி
பலசாலி
என மனிதஇனத்தை நம்ப வைக்கிறது

இதுவே அகங்காரமாக மாறுகிறது

நமது இந்த ஆணவமே இறையை அடைய தடுக்கிறது

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு  மனிதனும்
தான்  சாதாரண உயிரே என்று உணர்ந்து

நாமே சிறந்தவர்
என்ற
அகங்காரம்
ஆணவம்
தற் பெருமை
....
என அனைத்தையும்
ஒழிக்க & குறைக்க முயற்சி செய்வோம்

Story 3

!! *சொர்க்கமா..?? 😊💐 நரகமா..?? 👾🦂*!!

ஓர் முதியவர் தனது பேரனிடம்

பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

பேரன்: அது எப்படி தாத்தா?

முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

மது அருந்த பணம் வேண்டும்

சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

ஆனால் மகனே!

அன்பு காட்ட பணம்
தேவையில்லை

கடவுளை வணங்க பணம்
தேவையில்லை

சேவை செய்ய பணம் தேவையில்லை

விரதம் இருக்க பணம் தேவையில்லை

பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை

பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோருடமும் பகிரவும்
இலவசமாக....🤓😁😁😁😎😎

தினம் தவறாமல் நிச்சயம் இறைவன் நாமம் சொல்வோம்......🙋‍♂️👌🤝✍

நற்சிந்தனை.. 💖நற்பணி..💖  நல்வாழ்வு.. 💖

வாழ்க வளமுடன்..💖வாழ்த்துக்கள்..💖

Shot story 2

குட்டிக்கதை:

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை
கொண்டாடினார்கள்.

ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.

நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு  திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.

இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.
அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.

அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.

அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.

மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே?
அறிவில்லையா?" என்று கேட்டேன்.

அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.

அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.

நீதி:

இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது

குறிப்பு: சி்ரிக்க கூடாது

Shot story

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
*True. Knowledge is nowadays very important than money in this world.*

-படித்ததில் பிடித்தது-

Sunday, July 1, 2018

Life in using story

​1.பத்து நிமிடங்கள் முன்னதாக:​

காலை ​6 மணிக்கு எழுபவரா நீங்கள்?​
​5.50க்கு எழுந்து பழகுங்கள்.​

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

​2.பத்து நிமிடங்கள் மௌனமாக:​

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் ​தியானம் பழகுங்கள்.​ அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது ​மௌனத்தில் இருங்கள்​.

​3.முப்பது நிமிடங்கள்:​

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். ​உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா​ என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக ​முப்பது நிமிடங்கள்​ புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

​4.உணவில் ஒழுங்கு:​

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். ​முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.​

​5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:​

​​​Day Task.​​​ உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். ​நினைத்த அனைத்தும் நடப்பதை​ விரைவில் உணர்வீர்கள்.

​6.அடைசல்கள் அகற்றுங்கள்:​

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது ​அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.​

​7.மனிதர்களை நெருங்குங்கள்:​

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை ​நேசிக்கத் தொடங்குங்கள்.​ எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

​8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:​

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் ​அடுத்தது என்ன​ என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ​​​(WHAT NEXT?)​​​ இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

​9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:​

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே ​நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.​

​11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:​

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை ​புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.​ அது தானாகவே பெருகும்.

​12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:​

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று ​அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.​

​13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:​

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ​நகைச்சுவை உணர்வு,​ வாழ்வின் பூட்டப்பட்ட ​பல கதவுகளைத் திறந்துவிடும்.​

​14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:​

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
மகிழ்ச்சியாய் –
​வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்​ தீவிரமாகப் பங்கெடுங்கள்.

​புதிய சிந்தனை அல்ல இது....​

​புத்துணர்சியூட்டும் சிந்தனை.​🌸

Good time

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.
போர்க்களம் எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
போரில் தோல்வி  அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காகக் காத்திருக்கிறான்.

இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனைக் கூப்பிடுகிறார். "என்ன வேலையாகக் கூப்பிட்டீர்கள் அண்ணா?...

தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதைக் கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பிச் சென்றான்.

ராவணன் தலைமாட்டுக்கருகில்  நின்றான். காலடிஓசையைக் கேட்ட ராவணன் விழிகளைத் திறந்து பார்த்தான். ஒன்றும் பேச வில்லை.
ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்துக் காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார்.
 "தம்பி...உபதேசம் அறிவுரைபோன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.
நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.

இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன்.
அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றிக் கூறுகிறேன்."

1. Smart Phone வாங்காதே.
Smart boy என்று பேர் வாங்கு.

2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.

உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.

3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்...

Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, family கூட பொழுதை கழித்தால்...

நீ ஹேப்பி !..
உன் family ஹேப்பி
😳😜😜😝
😳😜😜😝

ஆணவம், அகங்காரம், தற்பெருமை shot story

ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார். மன்னன் திகைத்தான்.

”ஞானியே, நான் அரசன் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்” .,அவர் வரவில்லை.

”நான் மன்னன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்” .,
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.

“நான் இந்த நாட்டு மன்னன் நரசிம்ம வர்மன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”..

உள்ளிருந்தே ஞானி சொன்னார்.,”நான் செத்த பின் வா!”

மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறி யுடன் பார்த்தான்.

அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளி களாக இருந்தனர்!

அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!

'நான்', 'எனது' என்ற அகந்தை எவனுக்கு இருக்கிறதோ அவன் துறவி வேடம் பூண்டாலும் துறவி அல்ல.

'நான்' என்ற அகந்தை எவனுக்கு இல்லையோ அவன் இல்லறத்தில் இருந்தாலும் துறவியே துறக்க வேண்டியது.., 'நான்' என்ற அகந்தையையே.

ஆம்.,நண்பர்களே..,

"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது,
கண்ணில் விழுந்த தூசு போன்றது.

அந்த தூசியை சுத்தம் செய்யாமல்
உங்களால் எதையும் காண இயலாது.

எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்)
என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு
உலகத்தை பாருங்கள்.
Good luck boys........